வியாழன், 12 ஆகஸ்ட், 2010

அன்புடன் உன் தோழி!!!!

என்றும் புரியாத
புதிராய்
உள்ளாயே - நீ
காரணம் என்ன தோழி?


உனக்கு நியாபகம்
உள்ளதா?-நாம்
இருவரும் பழகிய
அந்த நாட்கள்?


அன்று-
உயிர் தோழிகள்
என்பதற்கே
எடுத்துக்காட்டாய்
இருந்தோம்!


இன்று-
எட்டி வந்தால் கூட
எட்டடி தூரம்
போவதேன்
தோழி!


அன்று-
இவ்வுலகை விட
பெரியது எது
என்றதும் - தயங்காமல்
'நம் நட்பு'
என்றாயே!

இன்று -
அனுவலவை விட
குறைந்து விட்டதே
'நம் நட்பு'
காரணம் என்ன
தோழி?


அன்று-
எனக்காக
ஆயுள் முழுவதும்
காத்திருப்பேன்
என்றாயே!

இன்று-
அரை கணம் கூட
காக்க மாட்டேன்
என்கிறாயே! புரியவில்லையே
தோழி!


அன்று-
விதி பெரியதோ?
மதி பெரியதோ?

என்றதும்
'நம் நட்பு'
பெரியது என்று
யோசிக்காமல்
சொன்னாயே!

இன்று-
நம் மதியையும்
நட்பையும் வென்று
விதி சிரிக்கிறதே
கேட்கிறதா
தோழி?


அன்று-
'அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்' - என்ற
வள்ளுவன் வாக்கை
செப்பினையே!


இன்று-
நம் நட்பும், அன்பும்
அந்த தாழ் இல்லாமலே
அடைப்பட்டு போனதே
காரணம் என்ன
தோழி?


அன்று-
'போய் வருகிறேன்'
என்பதைக்கூட
சொல்ல
யோசித்தாயே!

இன்று-
'போகிறேன்'
என்பதை கூட
சொல்லவில்லையே- நீ
காரணம் என்ன
தோழி?


அன்றும் நீதான்!
இன்றும் நீதான்!
மனம் மட்டும்
மாறியதேன்
தோழி?


நீ-
என்னை மறந்தாலும்
நான்-
உன்னை மறவேன்!'நம் நட்பு மலரும்'-
என்ற நம்பிக்கையில்,

- 'உன் தோழி'-
-பேசும் விழியால்