

சூரியன் போலவே மாறேனோ....!,என் ஜோதியில் உலகை ஆளேனோ.....!
உனக்கு நியாபகம்
இன்று -
அனுவலவை விட
குறைந்து விட்டதே
'நம் நட்பு'
காரணம் என்ன
தோழி?
அன்று-
எனக்காக
ஆயுள் முழுவதும்
காத்திருப்பேன்
என்றாயே!
இன்று-
அரை கணம் கூட
காக்க மாட்டேன்
என்கிறாயே! புரியவில்லையே
தோழி!
அன்று-
விதி பெரியதோ?
மதி பெரியதோ?
என்றதும்
'நம் நட்பு'
பெரியது என்று
யோசிக்காமல்
சொன்னாயே!
இன்று-
நம் மதியையும்
நட்பையும் வென்று
விதி சிரிக்கிறதே
கேட்கிறதா
தோழி?
அன்று-
'அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்' - என்ற
வள்ளுவன் வாக்கை
செப்பினையே!
இன்று-
நம் நட்பும், அன்பும்
அந்த தாழ் இல்லாமலே
அடைப்பட்டு போனதே
காரணம் என்ன
தோழி?
அன்று-
'போய் வருகிறேன்'
என்பதைக்கூட
சொல்ல
யோசித்தாயே!
இன்று-
அன்றும் நீதான்!
இன்றும் நீதான்!
மனம் மட்டும்
மாறியதேன்
தோழி?
நீ-
என்னை மறந்தாலும்
நான்-
உன்னை மறவேன்!'நம் நட்பு மலரும்'-
என்ற நம்பிக்கையில்,
- 'உன் தோழி'-
-பேசும் விழியால்
வணக்கம்,
வந்துட்டேன். எதாவது எழுதலாம்-நு நினைசுகிடே, ராத்திரி பூராவும் குப்புற படுத்து யோசிசுகிடே இருந்தேன். பட், சாரி அப்டியே தூங்கிட்டேன். ஓகே, எதாவது திகில் கதை எழுதலாம்னு நனைச்சு கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்தேன்.
நீங்க நெறைய திகில் கதையை படுச்சு இருக்கலாம், கரைச்சு குடுச்சு ஜீரணிக்கமா போய் இருக்கலாம். பட், ந எழுதுற இந்த கதை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். but , உங்களுக்கு பிடிக்கலேன்னா, ப்ளீஸ், திட்டாதிங்க. ஓகே. இப்ப கதைக்கு வரலாம்.
நான்காண்டு கல்லூரி வாழ்க்கை முடிந்து, பிரிவை சந்திக்க வேண்டிய நேரத்தில், எங்கயாவது சுற்றுலா போகலாம் என்று நம் கதையின் நாயகிகள் விரும்பிகிறார்கள். ( கதையின் நாயகிகள் வேற யாரு, நம்ப, மாலா, ஷீலா, கலா, ஜென்சி அண்ட் ஜான்சி).
ஒரு மலை பாங்கான இடத்துக்கு போகலாம் என்று ஐவரும் முடிவு செய்தார்கள். பிறகு, ஒரு முடிவுக்கு வந்து, jency=in எஸ்டேட்-க்கு போகலாம் என்று pack செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் jency-kku அவள் கொசின்-நை ஏர்போர்ட்-ல விடவேண்டிய வேலை இருந்ததால், அவள் மறுநாள் வருவதாக சொன்னா.
நால்வரும் கிளம்பினார்கள், அந்த எஸ்டேட்-க்கு. ( இந்த இடத்துல, ஒரு பாட்டு போடறோம். உள்ளஹி உள்ளஹி,லா ல !. ஜீப் ல போவோம், ஜாலி யா இருப்போம். )
ஜென்சி=இன் எஸ்டேட். செம்ம கூல்'ளன இடம். அருமையான கோடை வாசஸ்தலம். சில்லுnu ஒரு குளிர் காற்று. சுட சுட முழக பஜ்ஜி. பனி விழும் இரவு. ( சரி சரி. என்னை கட்டுபடிதிகிறேன்)
அந்த எஸ்டேட் ல இருந்த அந்த பங்களா வ பத்தி ஒரு நம்பிக்கை இருந்துச்சு. அந்த பங்களா வள ஒரு நானுறு வருசத்துக்கு முன்னாடி, ஒரு ஜமிந்தார் இருந்ததாகவும், அவரு ரொம்ப bad guy nu சொன்னங்க. அப்புறம் அவரு இறந்து போனதுக்கு அப்புறம், ஆவியாசுத்தி சுத்தி வர்றதாகவும் ஒரு நியூஸ் இருக்கு.
எஸ்டேட் பங்கலாக்குள்ள எல்லாரும் என்ட்ரி ஆகுரங்க. இருள் படர்ந்த எந்த பங்கலாக்குள்ள, ஒரு டோர்ச் லைட் வெளுச்சம் கூட இல்ல. ( ஹி...ஹி...ஹி... அங்க டோர்ச் லைட் இல்ல. எல்லாம் tube லைட்)
பின்னால் இருந்து ஒரு ஆள் கூப்டவே, அனைவரும் பயத்தோட திரும்பி பாக்றாங்க. பாத்தா, அது நம்ப கார்டன் ல வேலை பாக்ரவரு. அட, போங்கடா நு, வந்தவங்க எல்லாருக்கும் ரூம் ரெடி பண்ணி, டின்னெர் ரெடி பண்ணி, சந்தோசமா இருகாங்க. கார்டன் காரர், வீட்டுக்கு போய் தூங்க போய்ட்டாரு.
ஆளாளுக்கு ஒரு ரூம் ல போய் தூங்க போய்ட்டாங்க. அப்போது இரவு, ஒரு மணி போல் இருக்கும் போது, அழைப்பு மணி அழைத்தது. நால்வரும், மாடியில் இருந்து இறங்கி வந்தார்கள். எல்லாபேரோட முகத்திலும், பயம் தாண்டவம் ஆடியது.
இன்னொரு முறை மணி அடித்தது. தைரியசாலியான நம்ப மாலா போய், கதவை திறக்க, நின்று கொண்டு இருந்தா, நம்ப ஜென்சி !, "நீ தான ஜென்சி!, nanga எல்லாரும் பயந்துட்டோம்! என்னது இது? தலை ல இருந்து ரத்தம் வருது. என்ன ஆச்சு? " நு கலா கேக்க, " ஒன்னும் இல்ல சின்ன காயம், வேற ஒன்னும் இல்ல" நு சொன்னா ஜென்சி.
அதே நேரத்தில், மாடியில் இருந்து, டெலி போன் ரிங் கேக்க, ஷீலா மாடிக்கு சென்றால். டெலி போன்-நின் எதிர் முனையில், " ஹலோ, ஷீலா! ஏர்போர்ட் ல இருந்து ஜென்சி திரும்பி வர்றப்ப, ஆக்ஸிடென்ட் ல இறந்து போய்டா!"
ஷீலா வினால் மேற்கொண்டு பேச முடியவில்லை. அவளுக்கு கை நடுங்கியது. வார்த்தை வெளி வரவில்லை, வேர்த்து கொட்டியது. எச்சில் கூட விழுங்க முடியவில்லை. ரேசிவேர் i அப்டியே போட்டால்.
கிழே, அலறும் சத்தம் கேட்டது. ஆஅ.... ஆஆ.. ஆ... ஆ...,
---------------------------------------------//----------------------------------
mukkiya kurippu : no.., no,,,no...,no..., yaarum azhakudadhu....! aaavvav...!
---------------------------------------------------------------------------------

உன் நம்பினால் நம்புங்கள் .....! அது என் பள்ளி பருவம். பத்தாவது படித்துக்கொண்டு இருந்த நேரம். அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற கனவு. அதனால் நைட் study என்பது பழகி போன விஷயம் எனக்கு. இரவின் தனிமையை போக்க டிவி - இல் மெல்லிய ஓசையில் பாடல்கள் கேட்டுக்கொண்டு படிப்பது வாடிக்கை. இரவில் வீட்டில் எல்லோரும் உறங்கிய பிறகும் என் கடமை தொடரும். அன்றும் அப்படித்தான்., ஒரு மணிக்கு மேலையும் என் கடமை தொடர்ந்தது, பாடலை கேட்டுக்கொண்டு. இரண்டு மணியளவில், என் கடமையை முடித்து கொண்டு டிவி-யை அணைத்து விட்டு, தண்ணீர் அருந்திவிட்டு, படுக்கைக்கு சென்றேன். தூங்கிவிட்டேன்அந்த இனிய இரவில். பள்ளிக்கு சென்று திரும்பிய அந்த மாலைப்பொழுதில், எனக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. வீடு திரும்பிய நான் பசி மயக்கத்தில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். அப்பொழுது என் தம்பி, எனக்கு அருகில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். அவன் கேட்ட கேள்வி தான் எனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "என்ன அக்கா, ராத்திரி படுக்கபோகும் போது டிவி-யா ஆப் பண்ணாம தூங்கிட்ட. அதுலயும், சவுண்ட் வேற ஹை பிட்ச்-ல வச்சுட்டு". பகிர் என்று இருந்தது எனக்கு. "இல்லடா தம்பி, ஆப் பண்ணிட்டு தான் தூங்கினேன்", என்று அடித்து சொல்லியும் என் தம்பி கேட்டார் போல் இல்லை. எவ்வொலோ தடவை சொல்லியும், இதில் என்னை நம்ப யாரும் முயற்சி செய்யவில்லை. என்னை நானே நொந்துகொண்டேன். என் அம்மாஅந்த நேரத்தில் எனக்கு சப்போர்ட் பண்ணி பேசினார். " விடு பாப்பா, டிவி- ஆப் பட்டன் சரி இல்லாமல் இருந்து இருக்கும். நீ கவலைப்படாத" என்றார். கை கழுவிவிட்டு என் அறைக்கு திரும்பிக்கொண்டு இருந்த நேரம், என் அம்மா செல் போன்-இல் பேசிக்கொண்டு இருந்தது கேட்க முடிந்தது. " நீ சரியாய் தான் சொல்லி இருக்க. பாப்பா அதிகமா படுச்சு, என்னமோ ஆய்டுச்சு. இனிமேல் avalla ஜாக்ரதிய பாத்துக்கணும்" enraar. ennaku alugaiye vandhu vittadhu. ammavum namba villaye ennai. anrilirundhu, night study-yai vitten. |