திங்கள், 15 நவம்பர், 2010

நிலவே!! நான் எழுதும் மடல்...............


........ என் மடல் ........
" என்னவனை "
நினைக்கும்
போதெல்லாம்
உன்னை
பார்த்துக்கொள்கிறேன்!!!!!!!!
_
உன்னை
பார்க்கும்
போதெல்லாம்
"என் நண்பனை "
நினைத்துக்கொள்கிறேன்!!!!!!!!
!......இப்படிக்கு நட்புடன்,
பேசும் விழியாள்.....!

செவ்வாய், 9 நவம்பர், 2010

என் இனியவனே!!!!

நீ எந்தன் அன்பே !!!
நீ எந்தன் அன்பே ..........
உயிரோடு காதல் கலந்தேனே...... !!!
இந்த காதல் வாழ்க்கை.....
மறு ஜென்மம் தருவியா.....?
வருத்தம் வேண்டாம் காதலா....
பிரியும் வாழ்க்கை இல்லையடா.....
எந்தன் வாழ்கையும் நான் வாழ்ந்தால்....
அது உன்னோடு தானடா......!
இது போதுமே
அழகான அன்பு காதலியே....!
வார்த்தைகள் இல்லையே
இந்த வாழ்க்கை போதுமே......!
என் அழகா! என் அருகில் வா.....!
இது கனவே இல்லையடா..........!
உன் அன்பே போதுமே
இதுக்கு மேல் எது வேண்டுமே.......
கண்களில் கண்ணீர் வருதே......
இந்த காதல் உன்னை விட்டு பிரியாதே.....
மலர்கள் போல் இருக்கிறாய்......!
என்னை அணைக்க துடிக்கிறாய்.....
குளக்கரையே என் நண்பனடி......
மகிழ்ந்தேனே உன் அருகினில்......
காதலியே! என் உயிர் காதலியே!
வாழ்ந்தால் உன்னோடு வாழுவேன்......
மரணம் வந்தால் தனிமையில் செல்லுவேன்......
தனிமையில் போவியா.....?
என்னை விட்டு செல்வியா.........?
ஏழு ஜென்மன்ங்கள் உன்னோடு தான்....
மரணம் வந்தாலும்....
காதல் பிரிவு இல்லையே......!
என் உயிர் காதலா.......!
என்றும் நட்புடன்..........
பேசும் விழியாள்........


சனி, 6 நவம்பர், 2010

காதல் தியாகம் ! ! !

காதல் தியாகம்


என்னை தொட்டு விட்ட தென்றல்,
என்னை விட்டு சென்றதால்,
தென்றல் விட்டு போனதால் ,
மனம் வாடி போகாதா?,
உன்னை கண்ட நாள் முதல் ,
பூத்ததே உன் மீது காதல் ,
நீ இல்லாமல் வாழ்வதால் ஒன்றாக,
சேர்வதா ஏன் இனியவனே ....


கவலையா? ஏக்கமா ?
மனதில் இருந்து அழித்துவிடு ,
காதலா? நினைவகலா?
உன் பெற்றோருக்காக வீசி விடு ,
சுலபமாக இல்லையா என்னை மறப்பது ,
காதலிச்ச பாவமா என்னை மறந்து விடு ,

கொஞ்சம் நினைத்து பார்,
நீயும் யோசித்து பார் ,
கூட்டி கழிச்சி பார் ,
நம் குடும்பம் பட்ட துன்பம் ,
நான் ஒதுங்கி போவதால் ,
நம் உறவு அழிவதால் ,
தனிமையாக வாழ்வதால்
இல்லாமல் போவதே வெறும் இன்பம் ,

யாருக்கு இஷ்டம் பிரிவிலே யாருக்கு கஷ்டம் ,
முடிவிலே நமக்கில்லை பொருத்தம் ,
நம் மனசுக்குள்ளே வருத்தம் ,
ஏன் மீது வேண்டாம் கோவம் ,
இதனால் உனக்கு என்ன லாபம் ,
நான் செய்வதே அல்ல பாவம்,
இன்று நானே அன்பே சிவம் ,
இனி நடத்த போகிறேன் ஒரு புதிய நாடகம் ,
அதில் மறக்க வேண்டுமே உந்தன் அழகிய முகம் ,
மறக்க முடியுமா எனக்குள் பெரிய சந்தேகம் ,
நாடகத்துக்கு வெட்ச பெயர் "காதல் தியாகம்" ..


என்னை தொட்டு விட்டு தென்றல் ,
என்னை விட்டு சென்றதால் ,
தென்றல் விட்டு போனதால் ,
மனம் வாடி போகாதா ????

உன்னை கண்ட நாள் முதல் ,
பூத்ததே உன் மீது காதல் ,
நீ இல்லாமல் வாழ்வதால் ஒன்றாக ,
சேர்வதா என் இனியவனே !!!!!!!....

சத்தியமாக உன் மீது
ஆணையாக சொல்கிறேன் ,
என் இறுதி மூச்சில் உந்தன்
மூச்சை சுவாசிக்கிறேன்,
புண்ணியம் தேடி நானும்
காசிக்கே போகிறேன் ,
அந்த புண்ணியம் உன்
பெயரிலே எழுதி வைப்பேனே ..
ஞாபகம் இருக்கிறதா
அந்த இன்ப நிமிஷம் ,
இஷ்டபட்ட என்னை,
உன்னை தாலி கட்டும் புருஷன் ,
கலைந்தே போனதால்
நாம் போட்ட உண்மை வேஷம் ,
காதலை விட்டு கொடுப்பதாலே
இங்கே யாருக்கு சந்தோசம் ,

ஒன்றா இரேண்டா இரவு கனவுகள் ,
ஒன்றா இரண்டா நீ தந்த முத்தங்கள் ,
ஒன்றா இரெண்ட நாம் போட்ட சண்டைகள் ,
ஒன்றா இரேண்டா நினைவே சின்னங்கள் ..

காதலி என்ற வார்த்தையை
இனி மாற்றிவிட்ட சிநேகிதம்,
இன்று முதல் உன்னை காண
முடன் நானும் குருடன்,
அடுத்த ஜென்மத்தில்
வாழ வேண்டும் நம் ஊடல்,,,,,,,
காதலுக்குள்ளே வேண்டுமா
இப்போதே வேண்டும் நீ என்னுடன் ..


உன்னை தொட்டேன் அதுவா காதல் ,
என்னை கேட்டால் என்னடி பதில் ,
எதனால் நமக்குள்ளே மோதல் ,
உனக்கே சமர்ப்பணம் இந்த பாடல் ,
முளையிலே இருந்து முயல வேண்டும் ,

எனது விழி முழிக்கவில்லை,
இரவில் இருந்து பொழுது வரை ,
உன் நினைவே இங்கு, மரணமில்லை
நாம கொஞ்சம் பட்டகாயம் ,
காலம் கடந்தால் எல்லாம் மாயம் ,

பெரியோர்கள் கட்டளை பயம்
அதனால் நமக்கென்ன சாபம் ,
சாபத்தை ஏற்றுக்கொள்ள
நான் தாங்கிடுவேன் ,
அந்த சாபதிற்கே நீ
பலியானாலும் நான் தவிப்பேனடி,
சொல்லத்தான் முடியவில்லை
கண்மணி குடும்ப கொடுமைகளை ,

என் நெஞ்சம் வலிக்குதடி
இதயம் துடிக்கும்னே நினைக்கல,
செய்கிறேனடி கன்னி பெண்ணே
உன் நினைவுகளை விட்டே ,
எனக்கு விடுத்த உன்
அழகிய கண்ணீரின் சொட்டு ,
விட்டு பிரியாத உன்னை,
என்னை தட்டி
சென்றாய் பெண்ணே ,
கட்டி கொள்ளும் முன்னே
என்னை தழுவி கொண்ட பெண்ணே ,
நமக்குள் இருந்த காதலை
இனி மறந்து விடுவோம் ,
என் கடைசி வார்த்தை ,
"என்னை மன்னிக்கவும்" ...


"என்னை மன்னித்து விடு,,,,,,, மறந்து விடு ........ நமக்கான பிரிவிற்கு காலம்அர்த்தம் சொல்லும்.... "


என்றும் நட்புடன்........ ,

பேசும் விழியால்...............

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

அன்புடன் உன் தோழி!!!!

என்றும் புரியாத
புதிராய்
உள்ளாயே - நீ
காரணம் என்ன தோழி?


உனக்கு நியாபகம்
உள்ளதா?-நாம்
இருவரும் பழகிய
அந்த நாட்கள்?


அன்று-
உயிர் தோழிகள்
என்பதற்கே
எடுத்துக்காட்டாய்
இருந்தோம்!


இன்று-
எட்டி வந்தால் கூட
எட்டடி தூரம்
போவதேன்
தோழி!


அன்று-
இவ்வுலகை விட
பெரியது எது
என்றதும் - தயங்காமல்
'நம் நட்பு'
என்றாயே!

இன்று -
அனுவலவை விட
குறைந்து விட்டதே
'நம் நட்பு'
காரணம் என்ன
தோழி?


அன்று-
எனக்காக
ஆயுள் முழுவதும்
காத்திருப்பேன்
என்றாயே!

இன்று-
அரை கணம் கூட
காக்க மாட்டேன்
என்கிறாயே! புரியவில்லையே
தோழி!


அன்று-
விதி பெரியதோ?
மதி பெரியதோ?

என்றதும்
'நம் நட்பு'
பெரியது என்று
யோசிக்காமல்
சொன்னாயே!

இன்று-
நம் மதியையும்
நட்பையும் வென்று
விதி சிரிக்கிறதே
கேட்கிறதா
தோழி?


அன்று-
'அன்பிற்கும் உண்டோ
அடைக்கும் தாழ்' - என்ற
வள்ளுவன் வாக்கை
செப்பினையே!


இன்று-
நம் நட்பும், அன்பும்
அந்த தாழ் இல்லாமலே
அடைப்பட்டு போனதே
காரணம் என்ன
தோழி?


அன்று-
'போய் வருகிறேன்'
என்பதைக்கூட
சொல்ல
யோசித்தாயே!

இன்று-
'போகிறேன்'
என்பதை கூட
சொல்லவில்லையே- நீ
காரணம் என்ன
தோழி?


அன்றும் நீதான்!
இன்றும் நீதான்!
மனம் மட்டும்
மாறியதேன்
தோழி?


நீ-
என்னை மறந்தாலும்
நான்-
உன்னை மறவேன்!'நம் நட்பு மலரும்'-
என்ற நம்பிக்கையில்,

- 'உன் தோழி'-
-பேசும் விழியால்


புதன், 11 ஆகஸ்ட், 2010

என் நண்பனுக்காக!

மனம்-
வலிக்கும்
போதெல்லாம்
உன்னை
நினைத்துக்
கொள்கிறேன் !!!!
மகிழ்ச்சி-
அடையும்
போதெல்லாம்
உன்னை
நினைத்துக்
கொள்கிறேன்!!!!!!
புகழ்-
அடையும்
போதெல்லாம்
உன்னை
நினைத்துக்
கொள்கிறேன்!!!!!
இகழ்-
அடையும்
போதெல்லாம்
உன்னை
நினைத்துக்
கொள்கிறேன்!!!!!
சிரிக்கும்-
போதெல்லாம்
உன்னை
நினைத்துக்
கொள்கிறேன்!!!!!
அழும்-
போதெல்லாம்
உன்னை
நினைத்துக்
கொள்கிறேன்!!!!!
நண்பனான
உன்னை
நினைக்கும்
போதெல்லாம்
அடையும்
ஆனந்ததிற்கு
எல்லை
இல்லை
என்பதை
விட
உற்ற
துணையாய்
நீ-
எல்லா
நேரங்களிலும்
என்னுடன்
இருப்பாய்
என்ற,
நம்பிக்கையில்
உன்-
உயிர் தோழி
-பேசும் விழியால்

வெள்ளி, 23 ஜூலை, 2010

செவ்வாய், 25 மே, 2010

இது pei கதை thaanungo !?

வணக்கம்,
வந்துட்டேன். எதாவது எழுதலாம்-நு நினைசுகிடே, ராத்திரி பூராவும் குப்புற படுத்து யோசிசுகிடே இருந்தேன். பட், சாரி அப்டியே தூங்கிட்டேன். ஓகே, எதாவது திகில் கதை எழுதலாம்னு நனைச்சு கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்தேன்.
நீங்க நெறைய திகில் கதையை படுச்சு இருக்கலாம், கரைச்சு குடுச்சு ஜீரணிக்கமா போய் இருக்கலாம். பட், ந எழுதுற இந்த கதை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். but , உங்களுக்கு பிடிக்கலேன்னா, ப்ளீஸ், திட்டாதிங்க. ஓகே. இப்ப கதைக்கு வரலாம்.

நான்காண்டு கல்லூரி வாழ்க்கை முடிந்து, பிரிவை சந்திக்க வேண்டிய நேரத்தில், எங்கயாவது சுற்றுலா போகலாம் என்று நம் கதையின் நாயகிகள் விரும்பிகிறார்கள். ( கதையின் நாயகிகள் வேற யாரு, நம்ப, மாலா, ஷீலா, கலா, ஜென்சி அண்ட் ஜான்சி).
ஒரு மலை பாங்கான இடத்துக்கு போகலாம் என்று ஐவரும் முடிவு செய்தார்கள். பிறகு, ஒரு முடிவுக்கு வந்து, jency=in எஸ்டேட்-க்கு போகலாம் என்று pack செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் jency-kku அவள் கொசின்-நை ஏர்போர்ட்-ல விடவேண்டிய வேலை இருந்ததால், அவள் மறுநாள் வருவதாக சொன்னா.

நால்வரும் கிளம்பினார்கள், அந்த எஸ்டேட்-க்கு. ( இந்த இடத்துல, ஒரு பாட்டு போடறோம். உள்ளஹி உள்ளஹி,லா ல !. ஜீப் ல போவோம், ஜாலி யா இருப்போம். )

ஜென்சி=இன் எஸ்டேட். செம்ம கூல்'ளன இடம். அருமையான கோடை வாசஸ்தலம். சில்லுnu ஒரு குளிர் காற்று. சுட சுட முழக பஜ்ஜி. பனி விழும் இரவு. ( சரி சரி. என்னை கட்டுபடிதிகிறேன்)

அந்த எஸ்டேட் ல இருந்த அந்த பங்களா வ பத்தி ஒரு நம்பிக்கை இருந்துச்சு. அந்த பங்களா வள ஒரு நானுறு வருசத்துக்கு முன்னாடி, ஒரு ஜமிந்தார் இருந்ததாகவும், அவரு ரொம்ப bad guy nu சொன்னங்க. அப்புறம் அவரு இறந்து போனதுக்கு அப்புறம், ஆவியாசுத்தி சுத்தி வர்றதாகவும் ஒரு நியூஸ் இருக்கு.

எஸ்டேட் பங்கலாக்குள்ள எல்லாரும் என்ட்ரி ஆகுரங்க. இருள் படர்ந்த எந்த பங்கலாக்குள்ள, ஒரு டோர்ச் லைட் வெளுச்சம் கூட இல்ல. ( ஹி...ஹி...ஹி... அங்க டோர்ச் லைட் இல்ல. எல்லாம் tube லைட்)

பின்னால் இருந்து ஒரு ஆள் கூப்டவே, அனைவரும் பயத்தோட திரும்பி பாக்றாங்க. பாத்தா, அது நம்ப கார்டன் ல வேலை பாக்ரவரு. அட, போங்கடா நு, வந்தவங்க எல்லாருக்கும் ரூம் ரெடி பண்ணி, டின்னெர் ரெடி பண்ணி, சந்தோசமா இருகாங்க. கார்டன் காரர், வீட்டுக்கு போய் தூங்க போய்ட்டாரு.

ஆளாளுக்கு ஒரு ரூம் ல போய் தூங்க போய்ட்டாங்க. அப்போது இரவு, ஒரு மணி போல் இருக்கும் போது, அழைப்பு மணி அழைத்தது. நால்வரும், மாடியில் இருந்து இறங்கி வந்தார்கள். எல்லாபேரோட முகத்திலும், பயம் தாண்டவம் ஆடியது.

இன்னொரு முறை மணி அடித்தது. தைரியசாலியான நம்ப மாலா போய், கதவை திறக்க, நின்று கொண்டு இருந்தா, நம்ப ஜென்சி !, "நீ தான ஜென்சி!, nanga எல்லாரும் பயந்துட்டோம்! என்னது இது? தலை ல இருந்து ரத்தம் வருது. என்ன ஆச்சு? " நு கலா கேக்க, " ஒன்னும் இல்ல சின்ன காயம், வேற ஒன்னும் இல்ல" நு சொன்னா ஜென்சி.

அதே நேரத்தில், மாடியில் இருந்து, டெலி போன் ரிங் கேக்க, ஷீலா மாடிக்கு சென்றால். டெலி போன்-நின் எதிர் முனையில், " ஹலோ, ஷீலா! ஏர்போர்ட் ல இருந்து ஜென்சி திரும்பி வர்றப்ப, ஆக்ஸிடென்ட் ல இறந்து போய்டா!"

ஷீலா வினால் மேற்கொண்டு பேச முடியவில்லை. அவளுக்கு கை நடுங்கியது. வார்த்தை வெளி வரவில்லை, வேர்த்து கொட்டியது. எச்சில் கூட விழுங்க முடியவில்லை. ரேசிவேர் i அப்டியே போட்டால்.

கிழே, அலறும் சத்தம் கேட்டது. ஆஅ.... ஆஆ.. ஆ... ஆ...,

---------------------------------------------//----------------------------------
mukkiya kurippu : no.., no,,,no...,no..., yaarum azhakudadhu....! aaavvav...!

---------------------------------------------------------------------------------

திங்கள், 24 மே, 2010

சுட்ட கதை (nambungo)!!!!!


'மடல் எழுதவா வேண்டாமா?' என்று பலநூறு தடவை எல்லாம் யோசிக்கலை, தமிழ்ல எழுதி ரெம்ப நாளாச்சி, அதனாலே எழுதுறேன், எழுத்துப் பிழை இருக்கும், அது, இந்த மொக்கை எழுத்தாளருக்கு களங்கம் ஏற்ப்படுத்தலாம், 'விதி வலியது', வேற என்ன சொல்ல?
எங்கேயோ பிறந்தோம், எப்படியோ சந்தித்தோம், சந்தித்த உடனே காதல் கொள்ளும் அழகு என்னிடம் இருந்தாலும், நான் அவனை கொஞ்ச நாள் கழித்தே காதலனாக ஏற்று கொண்டேன்.காதலிக்கும் போது பின் விளைவுகளைப் பற்றி யோசிக்க நேரமில்லை, பெரும்நிகழ்வாக,எங்கள் இருவரையும் என்னோட அப்பா பார்த்து விட்டார்.
பார்த்தவர் என்னுடன் அவனை அழைத்து வரச்சொன்னார், அவனும் வந்தான், அவனுடையை புள்ளி விவரங்களை சேகரித்து கொண்ட என் தந்தை, எனது மதிப்பெண்களையும், அவனது மதிப்பெண்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். நான் எல்லாப் பாடத்திலேயும் 90 சதவீதக்கு மேல எடுத்து இருந்தேன், அவனோ பல பாடங்களிலே தேர்ச்சி பெறவில்லை.
அவனிடம் "நாங்க எல்லாம் அறிவாளியாக பிறந்தவர்கள், நீ இன்னும் படிக்கவே ஆரம்பிக்க வில்லை, நீ கல்லூரி முடிக்கும் முன்னே, என் மகளை விட அதிக மதிப்பெண் எடுத்து காட்டிவிட்டு என்னை வந்து பார்" என்று சொல்லி விட்டார்.
இதை கேட்டு நீ என்ன நினைச்சி இருப்பன்னு தெரியும், "யோவ் பொண்ணு தர முடியாதுன்னு நேரடியா சொல்ல வேண்டியதானே" என்று
எங்க வீட்டிலே பேசிவிட்டு நீ உன்னோட அறை நண்பர்களோட வீர வசனம் பேசினதை நீ மறந்து இருக்கலாம், நான் இன்னும் மறக்க வில்லை.
"மாப்பள அவங்க அப்பன் மண்டையை உடைக்கணும், அதும் என்கையாலே"
"மாப்ள, அவங்க அப்பன் பேசும் போது உன் ஆளு என்ன பண்ணிக்கிட்டு இருந்தா"
"அவ என்னடா பண்ணுவா, அவங்க அப்பன் அவ வாயை அடைச்சி வச்சி இருப்பான்,நெருப்போட விளையாடுறான் அவன்"
"கருப்பு நெருப்போடவாடா?"
"டேய் அவனுக்கு என்னையை பத்தி தெரியாது அவங்க அப்பனுக்கு, ஊரிலே என்னைய நேருக்கு நேர நின்னு பார்த்தா நெத்தியிலே அடிப்பேன்,பின்னாடி பார்த்தா பிடதியிலே அடிப்பேன்"
"டேய் முதல்ல பீடி அடிடா"
அப்படின்னு பேசி முடிக்கும் போது, கல்லூரி மூத்த மாணவர் வந்து
"டேய் ...கருவாலி, உன்னைய கல்லூரி முடிஞ்ச உடனே என்னையை பார்க்க சொல்லி இருந்தேன், ஏன்டா வரலை"
"எனக்கு கொஞ்சம் வேலை இருந்தது"
"என்னது வேலையா" ன்னு கேட்டுகிட்டே செவுள்ள ரெண்டு அடி, முதுகிலே ரெண்டு அடி அடிச்சி, சட்டையை பிடித்து உலுக்கி கீழே தள்ளி விட்டு
"இனிமேல நான் ௬ப்பிட்டு வரலை, உன் சங்கை கடிச்சி துப்பி புடுவேன்" அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டார்.
அவர் போன உடனே நான் "மச்சான், அவளோட அப்பன் மண்டையை உடைக்கணும்" ன்னு சொல்லிட்டு திரும்பி பார்த்தப்ப, நண்பன் ஒருத்தன்
"டேய் உன்னை இப்பத்தான் நாய் அடிக்கிற மாதிரி அடிச்சிட்டு போறான் ஒருத்தன்"
"மாப்பள ரொம்ப தெரிஞ்சவன் என்பதாலே விட்டுட்டேன், வேற எவனும் என் மேல கைய வைக்க முடியுமா?"
"அப்படியா நாங்க எல்லாம் உன்னைய ரொம்ப ரொம்ப தெரிஞ்சவங்க" என்று சொல்லி, உன்னை கும்மி எடுத்தார்கள் என்று கேள்விப் பட்டேன்.
எங்க அப்பா மேலதானே கோபம், நீ என்னைப் பார்க்க கண்டிப்பாக வருவாய் என்று வழி மேல விழி வைத்து காத்து இருந்தேன், கண் பார்வை மங்கி கண்ணாடி போட்டது தான் மிச்சம், நானே ஒரு முறை உங்க கல்லூரிக்கு வந்தேன், ஆனால் உன்னைத்தவிர எல்லோரையும் பார்க்க முடிந்தது.
அடுத்த ஆறுமாதம் கழித்து என் வீட்டுக்கு உன்னோட கடிதம் வந்தது,பசலை நோயிலே வாடி மீண்டும் எனக்கு தூது அனுப்பி விட்டு இருப்பாய் என்று நினைத்து ஆசையிலே திறந்து பார்த்த எனக்கு முதல் வரியிலே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாய் "அறிவு கேட்ட கழுதை" என்று ஆரம்ப வரியிலே , நீ எழுதின முழு கடிதமும் பொது இடத்திலே படிக்க முடியாது என்பதாலே ஒரு வரியோட முடிக்கிறேன், கடிதம் முழுவதும் என் தந்தையை திட்டு விட்டு கடைசியிலே உனது மதிப்பெண் சான்றிதழ் நகலை இணைத்து இருந்தாய், அனைத்து பாடத்திலும் 90 விழுக்காடுக்கு மேல் எடுத்து இருந்தாய்.
நீ கல்லூரி முடிக்கும் வரைக்கும் இதே போல கடிதங்கள் வந்தது, கல்லூரி முடிந்ததும் நீயே என்னை சந்திக்க வந்தாய் வந்ததும்
"அறிவாளி அப்பன் மகள் எப்படி இருக்கா?
என்னவோ நீங்க தான் அறிவுக்கு பிறந்தவங்கன்னு பெருமை அடிச்சான், இப்ப பார்த்தியா உன்னைய விட அறிவிலே நான் எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை நிருபிச்சி இருக்கேன்"
ஏதோ பேச வந்த என்னை "பேசுன அடிச்சி ஆத்திலே போட்டுருவேன்" ன்னு மிரட்டுற மாதிரி சொன்ன. என்னால பேச முடியலை, அழ மட்டுமே முடிந்தது.
"நல்லா அழு, இப்படி பட்ட அறிவாளியை விட்டுடோமொன்னு நல்லா அழு, நான் உன்னை விட அதிக மதிப்பெண் எடுத்து உன்னை கை பிடிக்க இல்லை, எங்களுக்கும் அறிவு இருக்குனு புரிய வைக்கத்தான்"
நான் உண்மையிலே அழுவதற்கு காரணம் "எங்க அம்மா இறந்து விட்டார்கள்" என்று ௬ட நீ சொல்ல விடவில்லை.அம்மா இறந்த கொஞ்ச நாள்ல அப்பாவோட மனசும் மாறி இருந்தது, அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார், எப்படியாவது உன்னை எனக்கு திருமணம் செய்துவைப்பேன் என்று சொன்னார், (தமிழ் படமா இருந்தா இந்த இடத்திலே ஆஸ்திரேலியா_ல ஒரு பாட்டு வந்து இருக்கும்)
உங்க ஊரின் விலாசம் எடுத்து கொண்டு எனது தந்தையும் வந்தார்.
உங்க வீட்டுக்கு வந்து, இந்தியாவிலே மிகப் பெரிய அலுவலகத்திலே நல்ல வேலையிலே இருப்பதாக தெரிந்து கொண்டும், அறிமுகம் முடித்து விட்டு என்னைப் பற்றிய விவரங்களை சொன்னார் என் தந்தை, ஆனால் அதை கேட்டு உங்க வீட்டிலே எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டார்கள் என்று விவரித்து உன்னை களங்கப் படுத்த விரும்ப வில்லை, ஆனால் இந்த விசயங்கள் உனக்கு தெரியவில்லை என்று நான் அறிவேன்.
பட்ட அவமானத்திலே பாதி உயிரே போய் விட்டது, கொஞ்ச நாள் எதுவுமே பேசாத நடைப் பிணமாக மாறிவிட்டார், ஆறு மாதம் கழித்து உனக்கு நிச்சய தார்த்தம் என்று கேள்விப் பட்டு, எப்படியாவது உன்னை சந்தித்து பேச வேண்டும் என்று, நானே வந்தேன், உன்னையும், உன் இந்நாள் மனைவியையும் மணக்கோலத்திலே பார்த்து விட்டு நானே ஊமை யாகி விட்டேன்.
கால ஓட்டத்திலே என் தந்தையும் காலமானார், தனித்து விடப் பட்டேன், உன் நினைவுகளோட மட்டும்,நீ என்னை மறந்து போனாலும், நீ அடிக்கடி சொன்ன வார்த்தையை என்னால் மறக்க முடியவில்லை, "நான் மூச்சு வாங்குறதே உன்னை சுவாசிக்கத்தான்"
"உன்னை
சுமந்த நினைவுகளோடு
முடிவில்லாமல்
பயணிக்கும் பேதை"
(நல்லா பாருங்க வரி, வரியா எழுதி இருக்கேன், அப்படினா கவிதைன்னு அர்த்தம்). உன் நினைவுகளோட வாழ்கையிலே ரெம்ப தூரம் பிரயாணம் செய்து விட்டேன், முடிய வேண்டிய நேரம், பயணம் மட்டுமல்ல, முக்கோண காதல் கதைகளிலே, ஒரு காதலை,காதலியை கழட்டி விட இந்திய கதை ஆசிரியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட பெயர் தெரியாத வியாதி, ஆனால் சாவுக்கு மட்டும் தேதி குறிக்கும் வியாதி, அதே வியாதி தான் எனக்கும் இருக்கு.இவ்வளவு நாளா நான் சுமந்த உனது நினைவுகளை இந்த கடிதம் சுமக்கும் என்ற நம்பிக்கையிலே பிரியா விடை பெறுகிறேன்.
பின் குறிப்பு: இது என்னோட சுயசரிதை இல்லைங்கோ!!!
சும்மா எதாவது எழுதலாம்னு. இது இன்னொரு ப்ளாக் ல இருந்து சுட்டது.
மனுசுடுங்கோ!!!!!!!

சனி, 22 மே, 2010

என் காதலியே!!!!!!!!!!!!!


எப்படி-
உள்ளாய்?
-என்
காதலியே!!!!
மனம்-
என்னும்
நீருற்றில்
நீ-
கலந்தப்பின்னும்
கரை சேர
முடியவில்லையே-
நான்!!!!
என்
சொல்லிற்கு
நீ-
மறுதலித்த
பின்னும்
உயிரோடு
நடமாடுகின்றேன்!!!!!!!
காரணம்-
என்றாவது
ஒரு நாள்
என்-
காதலை
ஏற்றுக்கொள்வாய்
என்று!!!!!!!!
காத்திருக்கிறேன்
உன்-
சொல்லிற்காக!!!!
உன்-
கெஞ்சலுக்காக!!!!!!!
இனி-
மேலும்,
என்னை
நெருப்பில்
வாட்டாதடி!!!!!!!
எல்லாம்
என்-
குற்றம்
என்கிறாயே,
உன்னிடத்தில்
ஏதும்
இல்லையா?!!!!
என்-
கனா
காணும்
காலத்தில்,
அதை-
கலைக்க
வந்தவள்
நீதானடி!!!!!!
சொர்க்கத்தில்
நின்ற படி
இருந்த
என்னை-
நரகத்தில்
நுழைய
வைத்தவள்
நீதானடி!!!!!!
நிஜமாய்
இருந்த
என்னை-
நிழலாட
வைத்தவளும்
நீதானடி!!!!!!!
மனிதனாய்
இருந்த
என்னை-
மடயவன்
ஆகினதும்
நீதானடி!!!!!
எல்லாம்-
உன்
குற்றம்
ஆனா பொழுதிலும்,
என்னை-
குற்றவாளி
கூண்டில்
வைப்பது
ஏனடி?!!!!!
பதில்
சொல்
உடனடியாக-
இனிமேலும்
மௌனம்
சாதிக்காதே!!!!!!!!!
காத்திருக்கும்
நொடியில்
கரையப்போவது
நான்-
மட்டும்
இல்லை!
என்-
காதலும்
தான்!!!!
என்-
கேள்விக்கு,
காத்திருக்கிறேன்.......
உன்-
விடையில்,,,
என்-
வாழ்நாள்
முழுதும்!
----இப்படிக்கு ----
'சாவு கூட
விரும்பாத
உன் காதலன்....,'
------------------------------------------------------------
இப்படிக்கு,
பேசும் விழியால்,
`

வியாழன், 13 மே, 2010

என்னவனுக்கு மடல்!!!!!!!!!!!!

உன்
நினைவே
தவமாக.....!
உன்னை
பார்ப்பதே
வரமாக....!
உன்
பிரிவே
சாபமாக....!

வெந்துகொண்டு
இருக்கிறேன்
உன்
நினைவால்...!
நொந்துகொண்டு
இருக்கிறேன்
உன்
பிரிவால்....!
தீயில்
நிற்கவைத்து
எரிக்கிறது
உன்
ஞாபகம்....!

ஒவ்வொரு
நாளும்
ரணமாக
தெரிகிறது
உன்னை
சுமந்துகொண்டு
இருப்பது.....!

உன்னை
பார்த்த
என்
கண்களை
சபித்துக்கொண்டு
இருக்கிறேன்....!

உன்னை
சுமந்த
நெஞ்சத்தை
மண்ணிற்கு
இரையாக்கி
விடவா
என
பிதற்றுகிறேன்....!

உன்னை
பார்த்த
பின்பு தான்
தோன்றியது
கனவோடும்
வாழலாமேன்ரும்...,
நினைவோடும்
சாகலமேன்றும்....!

வாழ்ந்தும்
வாழாமல்
இருக்கிறேன்....!
சாகும்
எண்ணம்
எழாமலில்லை ....!

ஒருமுறையாவது
பார்த்து
விடுகின்றேன் ....!
எனக்காக
உன்
கண்கள்
கண்ணீர்
சிந்துவதை....!
என்
மரணத்திற்காக....!

அது மட்டுமாவது,
என்
வாழ்வின்
பயனாக
இருக்கட்டும்....!
என்
அன்பின்
உயிரே..............!

இப்படிக்கு,
பேசும் விழியால்.

வியாழன், 6 மே, 2010

எச்சரிக்கை!!!!!!


எனக்கே_

தெரியவில்லை

என்_

கண்கள்

பிறரிடம்

பேசுகின்றது

என்று .....!

தெரிந்த

பின்

எச்சரித்தேன் ,

என்

கண்களை ....!

அது ,

உன்னிடம்

தான்

பேச

வேண்டும்

என்று ...!

ப்படிக்கு ,

பேசும் விழியால்

செவ்வாய், 4 மே, 2010

அமானுஷ்யம்_என் வாழ்வில்?!



நம்பினால் நம்புங்கள் .....!

அது என் பள்ளி பருவம். பத்தாவது படித்துக்கொண்டு இருந்த நேரம். அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற கனவு. அதனால் நைட் study என்பது பழகி போன விஷயம் எனக்கு. இரவின் தனிமையை போக்க டிவி - இல் மெல்லிய ஓசையில் பாடல்கள் கேட்டுக்கொண்டு படிப்பது வாடிக்கை. இரவில் வீட்டில் எல்லோரும் உறங்கிய பிறகும் என் கடமை தொடரும்.

அன்றும் அப்படித்தான்., ஒரு மணிக்கு மேலையும் என் கடமை தொடர்ந்தது, பாடலை கேட்டுக்கொண்டு. இரண்டு மணியளவில், என் கடமையை முடித்து கொண்டு டிவி-யை அணைத்து விட்டு, தண்ணீர் அருந்திவிட்டு, படுக்கைக்கு சென்றேன். தூங்கிவிட்டேன்அந்த இனிய இரவில்.

பள்ளிக்கு சென்று திரும்பிய அந்த மாலைப்பொழுதில், எனக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. வீடு திரும்பிய நான் பசி மயக்கத்தில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். அப்பொழுது என் தம்பி, எனக்கு அருகில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். அவன் கேட்ட கேள்வி தான் எனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "என்ன அக்கா, ராத்திரி படுக்கபோகும் போது டிவி-யா ஆப் பண்ணாம தூங்கிட்ட. அதுலயும், சவுண்ட் வேற ஹை பிட்ச்-ல வச்சுட்டு". பகிர் என்று இருந்தது எனக்கு. "இல்லடா தம்பி, ஆப் பண்ணிட்டு தான் தூங்கினேன்", என்று அடித்து சொல்லியும் என் தம்பி கேட்டார் போல் இல்லை. எவ்வொலோ தடவை சொல்லியும், இதில் என்னை நம்ப யாரும் முயற்சி செய்யவில்லை. என்னை நானே நொந்துகொண்டேன். என் அம்மாஅந்த நேரத்தில் எனக்கு சப்போர்ட் பண்ணி பேசினார். " விடு பாப்பா, டிவி- ஆப் பட்டன் சரி இல்லாமல் இருந்து இருக்கும். நீ கவலைப்படாத" என்றார்.
கை கழுவிவிட்டு என் அறைக்கு திரும்பிக்கொண்டு இருந்த நேரம், என் அம்மா செல் போன்-இல் பேசிக்கொண்டு இருந்தது கேட்க முடிந்தது. " நீ சரியாய் தான் சொல்லி இருக்க. பாப்பா அதிகமா படுச்சு, என்னமோ ஆய்டுச்சு. இனிமேல் avalla ஜாக்ரதிய பாத்துக்கணும்" enraar. ennaku alugaiye vandhu vittadhu. ammavum namba villaye ennai. anrilirundhu, night study-yai vitten.





ஞாயிறு, 2 மே, 2010

விழிகள் பேசும்...........


........ விழிகள் பேசும் ........

"விழியால்,,,,
பேச
கற்றுகொடுத்தவன்
நீ -
என்றாலும்
தெரியவில்லையே
உனக்கு
அதை
விழியால்
கேட்பதற்கு ............!!!"


என்றும் நட்புடன்........
பேசும் விழியாள் :-)....!!