சனி, 6 நவம்பர், 2010

காதல் தியாகம் ! ! !

காதல் தியாகம்


என்னை தொட்டு விட்ட தென்றல்,
என்னை விட்டு சென்றதால்,
தென்றல் விட்டு போனதால் ,
மனம் வாடி போகாதா?,
உன்னை கண்ட நாள் முதல் ,
பூத்ததே உன் மீது காதல் ,
நீ இல்லாமல் வாழ்வதால் ஒன்றாக,
சேர்வதா ஏன் இனியவனே ....


கவலையா? ஏக்கமா ?
மனதில் இருந்து அழித்துவிடு ,
காதலா? நினைவகலா?
உன் பெற்றோருக்காக வீசி விடு ,
சுலபமாக இல்லையா என்னை மறப்பது ,
காதலிச்ச பாவமா என்னை மறந்து விடு ,

கொஞ்சம் நினைத்து பார்,
நீயும் யோசித்து பார் ,
கூட்டி கழிச்சி பார் ,
நம் குடும்பம் பட்ட துன்பம் ,
நான் ஒதுங்கி போவதால் ,
நம் உறவு அழிவதால் ,
தனிமையாக வாழ்வதால்
இல்லாமல் போவதே வெறும் இன்பம் ,

யாருக்கு இஷ்டம் பிரிவிலே யாருக்கு கஷ்டம் ,
முடிவிலே நமக்கில்லை பொருத்தம் ,
நம் மனசுக்குள்ளே வருத்தம் ,
ஏன் மீது வேண்டாம் கோவம் ,
இதனால் உனக்கு என்ன லாபம் ,
நான் செய்வதே அல்ல பாவம்,
இன்று நானே அன்பே சிவம் ,
இனி நடத்த போகிறேன் ஒரு புதிய நாடகம் ,
அதில் மறக்க வேண்டுமே உந்தன் அழகிய முகம் ,
மறக்க முடியுமா எனக்குள் பெரிய சந்தேகம் ,
நாடகத்துக்கு வெட்ச பெயர் "காதல் தியாகம்" ..


என்னை தொட்டு விட்டு தென்றல் ,
என்னை விட்டு சென்றதால் ,
தென்றல் விட்டு போனதால் ,
மனம் வாடி போகாதா ????

உன்னை கண்ட நாள் முதல் ,
பூத்ததே உன் மீது காதல் ,
நீ இல்லாமல் வாழ்வதால் ஒன்றாக ,
சேர்வதா என் இனியவனே !!!!!!!....

சத்தியமாக உன் மீது
ஆணையாக சொல்கிறேன் ,
என் இறுதி மூச்சில் உந்தன்
மூச்சை சுவாசிக்கிறேன்,
புண்ணியம் தேடி நானும்
காசிக்கே போகிறேன் ,
அந்த புண்ணியம் உன்
பெயரிலே எழுதி வைப்பேனே ..
ஞாபகம் இருக்கிறதா
அந்த இன்ப நிமிஷம் ,
இஷ்டபட்ட என்னை,
உன்னை தாலி கட்டும் புருஷன் ,
கலைந்தே போனதால்
நாம் போட்ட உண்மை வேஷம் ,
காதலை விட்டு கொடுப்பதாலே
இங்கே யாருக்கு சந்தோசம் ,

ஒன்றா இரேண்டா இரவு கனவுகள் ,
ஒன்றா இரண்டா நீ தந்த முத்தங்கள் ,
ஒன்றா இரெண்ட நாம் போட்ட சண்டைகள் ,
ஒன்றா இரேண்டா நினைவே சின்னங்கள் ..

காதலி என்ற வார்த்தையை
இனி மாற்றிவிட்ட சிநேகிதம்,
இன்று முதல் உன்னை காண
முடன் நானும் குருடன்,
அடுத்த ஜென்மத்தில்
வாழ வேண்டும் நம் ஊடல்,,,,,,,
காதலுக்குள்ளே வேண்டுமா
இப்போதே வேண்டும் நீ என்னுடன் ..


உன்னை தொட்டேன் அதுவா காதல் ,
என்னை கேட்டால் என்னடி பதில் ,
எதனால் நமக்குள்ளே மோதல் ,
உனக்கே சமர்ப்பணம் இந்த பாடல் ,
முளையிலே இருந்து முயல வேண்டும் ,

எனது விழி முழிக்கவில்லை,
இரவில் இருந்து பொழுது வரை ,
உன் நினைவே இங்கு, மரணமில்லை
நாம கொஞ்சம் பட்டகாயம் ,
காலம் கடந்தால் எல்லாம் மாயம் ,

பெரியோர்கள் கட்டளை பயம்
அதனால் நமக்கென்ன சாபம் ,
சாபத்தை ஏற்றுக்கொள்ள
நான் தாங்கிடுவேன் ,
அந்த சாபதிற்கே நீ
பலியானாலும் நான் தவிப்பேனடி,
சொல்லத்தான் முடியவில்லை
கண்மணி குடும்ப கொடுமைகளை ,

என் நெஞ்சம் வலிக்குதடி
இதயம் துடிக்கும்னே நினைக்கல,
செய்கிறேனடி கன்னி பெண்ணே
உன் நினைவுகளை விட்டே ,
எனக்கு விடுத்த உன்
அழகிய கண்ணீரின் சொட்டு ,
விட்டு பிரியாத உன்னை,
என்னை தட்டி
சென்றாய் பெண்ணே ,
கட்டி கொள்ளும் முன்னே
என்னை தழுவி கொண்ட பெண்ணே ,
நமக்குள் இருந்த காதலை
இனி மறந்து விடுவோம் ,
என் கடைசி வார்த்தை ,
"என்னை மன்னிக்கவும்" ...


"என்னை மன்னித்து விடு,,,,,,, மறந்து விடு ........ நமக்கான பிரிவிற்கு காலம்அர்த்தம் சொல்லும்.... "


என்றும் நட்புடன்........ ,

பேசும் விழியால்...............