ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

உயிரே உனை தேடுகிறேன் ......



காணும் இடங்களில் எல்லாம்
கவிதை படிக்கிறேன் !

ஒ ரயிலே ! மெதுவாக போ ஒன்றும் அவசரமில்லை 
என்னோடு அவள் நினைவுகள் ....
எவரோ எழுதிய கவிதைகளில்
என்னவளின் நினைவுகள்.

என்னை விட அழகாய் உன்னை ரசித்தது 
உன் வீட்டு கண்ணாடி .....
ஏதோ புத்தகத்தில் எதார்த்தமாய்
உன் நினைவுகள் .

சாலை ஓர பலகையில் ...
விபத்து பகுதி பார்த்து கடக்கவும் !

பார்க்காமல் கடந்து  இருக்கலாம் உன் கண்களை
விபத்தில் பறிகொடுத்த இதயத்தோடு


காணும் இடங்களில் எல்லாம்
கவிதை படிக்கிறேன் !..............
                    

                  சாமுராய் .........







சனி, 5 பிப்ரவரி, 2011

!!!!!!!! உன்னவன் !!!!!!!!!


!!!!!!!!!!!!உன்னவன் என்னவளே !!!!!!!!!!
``````````````````````````````````````````

உறங்கும் என்னை உறங்காமல் ரசிக்கும் என் ரசிகை எங்கே!!!
ஊசியின் சப்தத்தை தட்டி கேட்கும் என் காவலாளி எங்கே ???
என் விரலை பிடித்து நடக்கும் என் வழிக்காட்டி எங்கே???
நான் பேசும் வார்த்தைகளோடு நர்த்தனமாடும் என் விழியானவள் எங்கே???

காற்றின் இடைவெளியோடு என்னை கரைத்தவள் எங்கே ???
கண்கள் கண்ட காட்சியின் கோபுரமானவள் எங்கே ???
சுவாசிக்கும் மூச்சின் தென்றலானவள் எங்கே ???
கொஞ்சி பேசும் சலங்கையின் குழந்தையானவள் எங்கே ???

என் பயணத்தின் ஜன்னலோர கவிதையானவள் எங்கே ???
நான் வாசித்த புத்தகத்தின் மடித்த பக்கங்கலானவள் எங்கே ???
நான் பேசும் தொலைப்பேசியின் அழைப்பு மணியானவள் எங்கே ???
செய்யும் வேலையின் போது குறிக்கிடும் என் நினைவானவள் எங்கே ???

உன்னவன் தேடுகிறேன் உறக்கத்தில் அல்ல உள்ளத்தில் இடம் கொடுக்க!!!!
உனக்காக உறங்காமல் தனிமையில் தவிக்கும் "உன்னவன்" !!!!!!
......................................................................................................................................................................

இப்படிக்கு நட்புடன்................
பேசும் விழியாள் :-).....!!!!


ரயில் பயணத்தோடு அவள் நினைவுகள்
......................................................................................................

ரயில்
பயணங்களில்
ரயிலை விட
வேகமாக ஓடிய
உன்
நினைவுகள்
தலையணைகளில்
கண்களிலே
கரைந்திட்ட
கனவுகள்
இனிய சுமைகளாய்
என்றும்

..........................!என் இதயத்தில்!.........................

##############################################

என்றும் நட்புடன் ............
பேசும் விழியாள் :-)....!