சனி, 5 பிப்ரவரி, 2011

!!!!!!!! உன்னவன் !!!!!!!!!


!!!!!!!!!!!!உன்னவன் என்னவளே !!!!!!!!!!
``````````````````````````````````````````

உறங்கும் என்னை உறங்காமல் ரசிக்கும் என் ரசிகை எங்கே!!!
ஊசியின் சப்தத்தை தட்டி கேட்கும் என் காவலாளி எங்கே ???
என் விரலை பிடித்து நடக்கும் என் வழிக்காட்டி எங்கே???
நான் பேசும் வார்த்தைகளோடு நர்த்தனமாடும் என் விழியானவள் எங்கே???

காற்றின் இடைவெளியோடு என்னை கரைத்தவள் எங்கே ???
கண்கள் கண்ட காட்சியின் கோபுரமானவள் எங்கே ???
சுவாசிக்கும் மூச்சின் தென்றலானவள் எங்கே ???
கொஞ்சி பேசும் சலங்கையின் குழந்தையானவள் எங்கே ???

என் பயணத்தின் ஜன்னலோர கவிதையானவள் எங்கே ???
நான் வாசித்த புத்தகத்தின் மடித்த பக்கங்கலானவள் எங்கே ???
நான் பேசும் தொலைப்பேசியின் அழைப்பு மணியானவள் எங்கே ???
செய்யும் வேலையின் போது குறிக்கிடும் என் நினைவானவள் எங்கே ???

உன்னவன் தேடுகிறேன் உறக்கத்தில் அல்ல உள்ளத்தில் இடம் கொடுக்க!!!!
உனக்காக உறங்காமல் தனிமையில் தவிக்கும் "உன்னவன்" !!!!!!
......................................................................................................................................................................

இப்படிக்கு நட்புடன்................
பேசும் விழியாள் :-).....!!!!